Home FeedBack About us Contact us
இந்தியாவின் செல்வாக்குமிக்க வீரர் சச்சின்

இந்திய விளையாட்டு அரங்கில் மிகுந்த செல்வாக்குமிக்க வீரராக "மாஸ்டர் பேட்ஸ்மேன்" " சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.

"ஒலிம்பிக் தங்கமகன்" " அபினவ் பிந்த்ரா, "டென்னிஸ் புயல்" " சானியா மிர்சா ஆகியோரும் "டாப்-50" " பட்டியலில் இடம் பெற்றனர்.

பிரபல "ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்" " பத்திரிகை, விளையாட்டு அரங்கில் சக்தி வாய்ந்த "டாப்-50" " நட்சத்திரங்களை ஆண்டுதோறும் தேர்வு செய்கிறது. இந்திய விளையாட்டு வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு, இளம் தலைமுறைக்கு அளித்த ஊக்கம், சொந்த சாதனைகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இதன் அடிப்படையில், "நம்பர்-1" " இடத்தை "சாதனை நாயகன்" " சச்சின் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி பெற்றார். மூன்றாவது இடம் விஜய் மல்லைய்யாவுக்கு கிடைத்தது. விரைவில் ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத் பவார், பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோர் முறையே நான்கு, ஐந்து, ஆறாவது இடத்தை பெற்றனர்.

சானியா "50" ":
 பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ரா 41வது இடம் பெற்றார். சர்ச்சில் பிரதர்ஸ் கால்பந்து கிளப் அணியின் அலேமோ, டெம்போ ஸ்போர்ட்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாஸ் முறையே 48, 49வது இடத்தை பிடித்தனர்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 50வது இடத்தை பெற்றார். மும்பையில் நடந்த விழாவில் "டாப்-50" " பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் முதலிடம் பெற்ற சச்சினுக்கு விருது தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்ததற்காக "தங்க பேட்" " ஒன்றும் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

இது குறித்து சச்சின் கூறுகையில்,"நாட்டுக்காக முழுமனதுடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். இரண்டு அல்லது மூன்று தலைமுறையாக விளையாடி வருகிறேன். சமீபத்தில் இரட்டை சதம் அடித்தது தொடர்பாக இன்னும் வாழ்த்துக்கள் குவிகின்றன. இதனை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது," "" "என்றார்.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதலாவது இந்தியரான அபினவ் பிந்த்ரா கூறுகையில், " தங்கம் வெல்வதற்காக 16 ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த தருணம் மறக்க முடியாதது," "" " என்றார்.

சானியா மிர்சா கூறுகையில்,"செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியான விஷயம். காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். இந்த ஆண்டு டில்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக தயாராகி வருகிறேன்," "" " என்றார்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss