உலக கோப்பை கால்பந்து போட்டி, தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த போட்டித் தொடரின் 2 அரை இறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிபா) தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி ருஸ்தன்பர்கில் அமெரிக்க அணியுடன் மோதவுள்ள போட்டி (ஜூன் 12) மற்றும் போர்ட் எலிசபத்தில் ஸ்லோவேனியா அணியுடன் (ஜூன் 23) மோதவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துவிட்டன.
நடப்பு சாம்பியன் இத்தாலி & பராகுவே (கேப் டவுன், ஜூன் 11), பிரேசில் & போர்ச்சுகல் (டர்பன்) போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்தது.
மொத்தம் நடக்கவுள்ள 64 ஆட்டங்களில், இன்னும் 53 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செவ்வாயன்று தொடங்குகிறது. நான்காவது கட்ட விற்பனையில் 4 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு ‘பிபா’ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








