இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று சிவ்சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த சிவ்சேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால் தாக்ரே, இந்தியாவின் மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழிதான் என்றும், அதனை மற்ற மொழி பேசும் மக்களின் மீது திணிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
“அது (இந்தி) தேசிய மொழி (ராஷ்ட்ர பாஷா) அல்ல. இந்த நாட்டின் மற்ற மொழிகளைப் போல அதுவும் ஒன்று” என்று பால் தாக்ரே கூறியுள்ளார்.
சிவ்சேனா கட்சி மீது மராட்டிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், அவர்களுக்காக சிவ்சேனா நடத்தும் போராட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் ஊடகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு ஆதரிப்பதாகக் கூறிய தாக்ரே, அதனை லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பதை கண்டித்தார்.
முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்திய லாலு பிரசாத், பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்று தாக்ரே பேசியுள்ளார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








