அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது பெறுவோரின் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இது 82வது அகாடமி விருது விழாவாகும். இந்த விருது விழா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுதும் உள்ள திரை ரசிகர்களை பிரமிக்க வைத்த அவதார் படம் விருதுகளை அள்ளிச் செல்லும் என பெருவாரியாக எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலெஸில் ஆஸ்கர் விழாவுக்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.
சிறந்த நடிகர் விருதுக்கு ஜெப் பிரிட்ஜஸ், ஜார்ஜ் க்ளூனி, காலின் பிர்த், மார்கன் ப்ரீமேன், ஜெரீமி ரென்னர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகைக்கான விருதுக்கு சான்ட்ரா புல்லக், ஹெலின் மிர்ரன், கேரி முல்லிகன், காட்பரி சிதிபி, மெரைல் ஸ்டிரீப் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு ஜேம்ஸ் காமரூன் (அவதார்), கேத்தரின் பிக்ளோ (தி ஹர்ட் லாக்கர்) குவின்டின் டாரன்டினோ (இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்), லீ டேணியல்ஸ், ஜேசன் ரீட்மேன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதில் கேத்தரின், ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் படம் சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் ஆகிய 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை ஆஸ்கர் விருதுகள் இந்தியர் யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. கடந்த ஆண்டு நடந்த விழாவின்போதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர்களையும், ரசூல் பூக்குட்டி, குல்சார் ஆகியோர் தலா ஒரு விருதையும் அள்ளி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








