எல்லா நடிகைகளையும ரஞ்சிதா போல நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் தப்பு செய்தார் என்பதால் எல்லோருமே அப்படியா செய்வார்கள் என்கிறார் நடிகை தமன்னா.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், நான் கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுவேன். அதோடு சரி. அளவுக்கதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை.
ரஞ்சிதா பற்றி நான் என்ன சொல்ல... அது அவர் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது...." என்றார்.
சூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருடனும் நடித்துள்ளீர்களே... இவர்களில் யார் உங்களுக்கு வசதியாக இருந்தார் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்க, சற்று நேரம் யோசித்தவர் இப்படிச் சொன்னார்:
"அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்... கம்ஃபர்ட்!" என்றார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








