கோவையில் உள்ள தனியார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். மனித நேய அறக்கட்டளை மூலம் அங்கு சிகிச்சை பெறும் 18 குழந்தைகளின் தேவைகளை கேட்டு பரிசு பொருட்கள் வழங்கினார். வாழ்த்து அட்டையும் கொடுத்தார்.
அதில் மலர்கள் கூட பொறாமைப்படுகிறது உங்கள் இதழ்கள் மலர்வதை பார்த்து என எழுதப்பட்டிருந்தது. பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
எனது தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ தோன்றியது.
எனவே கோவை வந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்கி உள்ளேன். எனது மன்றம் மூலமும் அறக்கட்டளை மூலமும் இவை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தினந்தோறும் நன்மைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லது நடக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதனால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கும். அவர்களின் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.
இவ்வாறு நடிகர் பார்த்திபன் பேசினார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








