தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உலா வருபவர் கிரண். இவர் தெலுங்கில் “ஹைஸ்கூல்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அவர் ஆசிரியையாக நடித்துள்ளார். தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனை கிரண் காதலிப்பது போல் கதை உள்ளது. இதற்கு ஆந்திராவில் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில் வாரங்கல்லை சேர்ந்த சமூக சேவகர் சக்ரபாணி ஐதராபாத் ஐகோர்ட்டில் “ஹைஸ்கூல்” படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஆசிரியை வேடத்தில் தோன்றும் நடிகை கிரண் மாணவனை காதலிப்பது போல் “ஹைஸ்கூல்” படத்தில் காட்சி உள்ளது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.
இப்படத்தை பார்ப்பவர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிபதிகள் குலாம் முகமது, பவானி பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் “ஹைஸ்கூல்” படத்தை 9-ந்தேதி வரை தியேட்டர்களில் வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.
அதன் பிறகு படத்தை பார்த்து வெளியிட அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








